தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையிலே இனிமை காண முடியுமா?

பாடல்: தனிமையிலே
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடலாசிரியர்: கே.டி. சந்தானம்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: : பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1962
தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச்
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச்
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா? - வெறும்
மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா? தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை - நாம்
காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் - இந்த
அவனி எல்லாம் போற்றும் ஆண்டவானாயினும் தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?


1 comment: